சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி, காமராஜபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளி, போஸ்நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் சாய்தள வசதி உள்ளிட்டவைகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்து வசதிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அதன்பின் புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன சோதனை பணியினை அவர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவாசுப்பிரமணியன், தாசில்தார் முருகப்பன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.