கட்டுமாவடி அருகே முடுக்குப்பட்டி கடற்கரை கிராமத்தில் கரை ஒதுங்கிய அரிய வகை ஆமை



மணமேல்குடி அருகே கட்டுமாவடி அடுத்துள்ள முடுக்குப்பட்டி கடற்கரை கிராமத்தில் அரியவகை ஆமை ஒன்று கரை ஒதுங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுக்கா, கட்டுமாவடி அருகில் உள்ள முடுக்குப்பட்டி கிராமத்தில் கடல் கரைக்கு சித்தாமை (Olive Ridley Sea Turtle – Lepidochelys olivacea) ஒன்று அடித்து வரப்பட்டது. திருச்சி தலைமை வனப்பாதுகாவலர் திரு சு. ராமசுப்பிரமணியன், இ.வ.ப., மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் திரு கு. சுதாகர் ஆகியோரின் உத்தரவுப்படியும், வழிகாட்டுதலின்படியும், அறந்தாங்கி வனச்சரக அலுவலர் எம். சதாசிவம், மணமேல்குடி பிரிவு வனவர் எஸ். அன்புமணி, பாதுகாப்பு காவலர் முத்துராமன் ஆகியோர்கள் சித்தாமையினை மீட்டு தனியார் படகில் ஏற்றி ஆழமான கடல் பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக விட்டனர். 

பாதுகாப்பாக விடப்பட்ட சித்தாமை கடலில் நல்ல நிலையில் நீந்தி தனது வாழ்விடம் நோக்கி சென்றது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கடல் பகுதிகளில் சித்தாமை காணப்படுவது இங்கு ஏற்ற வாழ்விடம் உள்ளதை உறுதி செய்துள்ளது. இம்மாவட்டத்தில் ஆழம் குறைவான கடற்பகுதிகளில் கடற்புற்கள் அதிகப்படியாக காணப்படுவதால் உணவு தேடி இப்பகுதிக்கு சித்தாமை வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

வன உயிரின (பாதுகாப்பு) சட்டம், 1972, அட்டவணை I- பகுதி II-ன் படி சித்தாமை பாதுகாக்கப்பட்ட அரிய வகை கடல் வாழ் வன உயிரினமானகும். 

இவற்றை வேட்டையாடுவது அல்லது தீங்கு விளைவிப்பது தடைசெயய் ப்பட்டுள்ளது. மீறுவோர்க்கு வன உயிரின (பாதுகாப்பு) சட்டம், 1972, பிரிவு 51-ன் படி மூன்று வருடத்திற்கு குறையாமல் ஏழு வருடம் வரை சிறைத்தண்டையும் மற்றும் ரூ.10,000/-க்கும்; குறையாத அபராதமும் விதிக்க வழி வகை உள்ளதால், கடல் வாழ் வன உயிரினங்களை பாதுகாகக் வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments