அறந்தாங்கி வட்டார வளமையத்தின் சார்பில் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் கேடயம், சான்றிதழ், மெடல் ஆகியவற்றை வழங்கினார்.
அறந்தாங்கி வட்டார வள மையத்தில் நடந்த ஓவிய திருவிழா போட்டியில் பரிசு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி உத்தரவின்படி, அறந்தாங்கி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் ஓவியத் திருவிழா போட்டி நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வீரப்பன் மற்றும் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் பயிற்றுனர் ஈஸ்வரன் வரவேற்றார். இறுதியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) சிவயோகம் நன்றியுரை கூறினார்.
கோங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ரம்யா முதலிடத்தையும்,
வல்லவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரசீனா இரண்டாம் இடத்தையும்,
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நிவாஷினி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், சான்றிதழ், மெடல் ஆகியவைகளை வழங்கினார்.
ஆசிரியர் பயிற்றுனர் திருமதி நீலவேணி இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
இவ்விழாவில் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் சிறப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.