எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்



எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு  மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 6.3.2021 மாவட்ட தலைமையகத்தில் மாவட்ட தலைவர் U.செய்யது அகமது தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பொதுச் செயலாளர் Dr.ஹனிபா செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் முன்னிலை வகிக்க, இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து முன்தயாரிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும் சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற சக்திகள் திரள்வதில் ஏற்பட்டுள்ள குறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

மேலும், தேர்தல் போட்டியில் உள்ள அணிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேவை தொடர்பான அழைப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதோடு, அதனை அனுசரித்து எதிர்வரும் சட்டமன்றத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் உறுப்பினர்கள் இடம்பெறும் வகையில் தேர்தல் போட்டி தொடர்பான அனைத்து முடிவுகள் எடுக்கும் அதிகாரம் கட்சியின் மாநில செயலகக்குழுவிற்கு மாநில செயற்குழுவால் ஒருமனதாக வழங்கப்பட்டது மாவட்ட செயற்குழுவில் வரவேற்கப்படுகிறது.

மிகவும் உற்சாகமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில தலைமை எடுக்கும் முடிவை களத்தில் நின்று வீரியமாக, சிறப்பாக செயலாற்ற தயாராக இருப்பதாக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தெரிவிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments