எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 6.3.2021 மாவட்ட தலைமையகத்தில் மாவட்ட தலைவர் U.செய்யது அகமது தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பொதுச் செயலாளர் Dr.ஹனிபா செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் முன்னிலை வகிக்க, இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து முன்தயாரிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும் சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற சக்திகள் திரள்வதில் ஏற்பட்டுள்ள குறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் போட்டியில் உள்ள அணிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேவை தொடர்பான அழைப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதோடு, அதனை அனுசரித்து எதிர்வரும் சட்டமன்றத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் உறுப்பினர்கள் இடம்பெறும் வகையில் தேர்தல் போட்டி தொடர்பான அனைத்து முடிவுகள் எடுக்கும் அதிகாரம் கட்சியின் மாநில செயலகக்குழுவிற்கு மாநில செயற்குழுவால் ஒருமனதாக வழங்கப்பட்டது மாவட்ட செயற்குழுவில் வரவேற்கப்படுகிறது.
மிகவும் உற்சாகமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில தலைமை எடுக்கும் முடிவை களத்தில் நின்று வீரியமாக, சிறப்பாக செயலாற்ற தயாராக இருப்பதாக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தெரிவிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.