ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த ஜனவரி மாதம் 18-ந்தேதி தங்கச்சிமடத்தை சேர்ந்த மெர்சியா, உச்சிப்புளியை சேர்ந்த நாகராஜ், செந்தில்குமார், மண்டபத்தை சேர்ந்த சாம் ஆகிய 4 மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினர் கப்பல் மோதியதில் 4 மீனவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து திருப்புனவாசல் கடலோர காவல் குழும போலீசார் 4 மீனவர்கள் மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் 4 பேர் தொடர்பான வழக்கு திருப்புனவாசல் கடலோர காவல் குழுமத்தில் இருந்து கோட்டைப்பட்டினம் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கோட்டைப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மீனவர் ஆரோக்கியசேசு கொடுத்த புகாரின் பேரில் தமிழக மீனவர்கள் 4 பேரும் மாயம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.