ஆவுடையார்கோவில் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறை போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன் தொடங்கி வைத்து பேசும்போது, ஆவுடையார்கோவில் நான்கு ரதவீதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தில் இருந்தபடியே அனைத்தையும் பார்த்து கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றசம்பவங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் பாண்டியன், செயலாளர் பெரிய முத்து, வர்த்தக சங்க தலைவர் மாணிக்கம் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், வர்த்தகர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ரோட்டரி முன்னாள் தலைவர்அண்ணாத்துரை நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.