வாட்ஸ்அப் நிறுவனம், சமீபத்தில் தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்தது. இது பயனர்களின் தனியுரிமைக்கு எதிரான செயல் என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், வாட்ஸ்அப் பயனர்கள் ‘சிக்னல்’, ‘டெலிகிராம்’ உள்ளிட்ட வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களின் தனிப்பட்ட மெசேஜ்களைப் பாதுகாக்கும் என தெரிவித்ததோடு, புதிய தனியுரிமை கொள்கைகளை ஏற்காவிட்டாலும் அவர்களின் கணக்குகள் முடக்கப்படாது எனவும், சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்களை அமல்படுத்துவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியது.
இந்தநிலையில், தள்ளி வைக்கப்பட்ட மாற்றங்களை அமல்படுத்தும் முயற்சியில் வாட்ஸ்அப், தற்போது இறங்கியுள்ளது. மே 15 ஆம் தேதிக்குள் மாற்றம் செய்யப்பட்ட சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு பயனாளர்களுக்கு வாட்ஸ்அப், இன்-அப் நோட்டிஃபிகேஷன்களை அனுப்பி வருகிறது.
அதேசமயம் வாட்ஸ்அப், மே 15ஆம் தேதிக்குள் பயனர்கள் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவிட்டாலும், அவர்கள் கால் மற்றும் நோட்டிஃபிகேஷனைப் பெற முடியும். ஆனால் செய்திகளை அனுப்பவோ, பெறவோ இயலாது. தொடர்ந்து 120 நாட்களுக்கு அவ்வாறு வாட்ஸ்அப் கணக்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால், அந்தக் கணக்கு தானாகவே டெலிட் ஆகிவிடும். அவ்வாறு டெலிட் ஆனவற்றைத் திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்துள்ளது. இதன்மூலம் தனியுரிமை கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.