இலங்கையில், “புர்கா” அணிய தடை விதிக்கப்படவுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் இந்த தகவலைதெரிவித்துள்ள அமைச்சர் வீரசேகரா, இலங்கை முழுவதும் செயல்படும் சுமார் ஆயிரம் மதரசாக்கள் (இஸ்லாமிய பள்ளிகள்) மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையில், இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்ததில்லை என்று கூறியுள்ள வீரசேகரா, ‘புர்கா’ என்பது சமீபத்தில் வந்துள்ள, மத பயங்கரவாதத்தின் அடையாளம் என்று கூறியுள்ளார்.
அமைச்சகத்தின் சார்பாக இதுகுறித்த உத்தரவு, அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மதரசாக்கள் இலங்கையின் கல்விக்கொள்கைக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, கொரோனாவால் உயிரிழந்தவர்களை எரியூட்டுவதற்கு இலங்கை அரசு உத்தரவிட்டது. அமெரிக்கா மற்றும் சர்வதே மனித உரிமை அமைப்புகளின் விமர்சனத்திற்குப் பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
2019ஆம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்த சமயம், ‘புர்கா’ அணிவதற்கு இடைக்காலமாக இலங்கை அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், சுவிட்சர்லாந்து நாட்டில், பொது இடங்களில் ‘புர்கா’ அணிவதற்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், தடை விதிப்பதற்கு ஆதரவாக பெரும்பான்மையான மக்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.