தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 16 மாணவிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அதன்படி தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 11ஆம் தேதி 460 மாணவிகளுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மறுநாள் 110 மாணவிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவுகளாக முதலில் 20 மாணவிகளுக்குத் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்பட்டது.
இந்த சூழலில் மொத்தம் 610 மாணவிகள் 35 ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மொத்தம் 56 மாணவிகள், ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிப்பிற்கு ஆளானவர்களின் உறவினர்கள், நண்பர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர். சோதனைகள் தீவிரப்படுத்தியதன் காரணமாகவே இப்போது இந்த பாதிப்பு தொடர்பாக அரசுக்குத் தெரியவந்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.