அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 27 வேட்பு மனுக்கள் ஏற்பு!



புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை (தனி), அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதியில் 27 மனுக்கள் ஏற்கப்பட்டது. 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் ராமசந்திரன் (காங்.), ராஜநாயகம் (அ.தி.மு.க.), ஜுவா (பகுஜன் சமாஜ் கட்சி), அமலதாஸ் (புதிய தமிழகம்), ராமலிங்கசாமிஆதித்தன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி), குமரப்பன் (மை இந்தியா பார்டி), சக்திவேல் (தமிழக முற்போக்கு மக்கள் கட்சி), சிவசண்முகம் (அ.ம.மு.க.), செல்வராஜ் (அ.ம.மு.க.), சேக்முகமது (மக்கள் நீதி மய்யம்), தமிழரசன் (புதிய தமிழகம்), முகமது இப்ராஹிம் (நாம் தமிழர் கட்சி), ஹுமாயூன் கபீர் (நாம் தமிழர் கட்சி), அர்ஜுணன் (சுயே), கனகராஜ் (சுயே), சிவக்குமார் (சுயே), செய்யது சுல்தான் இப்ராஹிம் (சுயே), செல்வகுமார் (சுயே), தில்லைநாதன் (சுயே), தெட்சிணாமூர்த்தி (சுயே), பாண்டியன் (சுயே), மகேந்திரன் (சுயே), முத்துகருப்பையா (சுயே), முத்துசெல்வம் (சுயே), ராமசாமி (சுயே), வேல்ராஜ் (சுயே), ஜெகதீசன் (சுயே) உள்ளிட்ட 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் 123 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். மாலை 3 மணிக்குள் திரும்ப பெறலாம். அதன்பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments