புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை (தனி), அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.
அறந்தாங்கி தொகுதியில் 27 மனுக்கள் ஏற்கப்பட்டது. 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் ராமசந்திரன் (காங்.), ராஜநாயகம் (அ.தி.மு.க.), ஜுவா (பகுஜன் சமாஜ் கட்சி), அமலதாஸ் (புதிய தமிழகம்), ராமலிங்கசாமிஆதித்தன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி), குமரப்பன் (மை இந்தியா பார்டி), சக்திவேல் (தமிழக முற்போக்கு மக்கள் கட்சி), சிவசண்முகம் (அ.ம.மு.க.), செல்வராஜ் (அ.ம.மு.க.), சேக்முகமது (மக்கள் நீதி மய்யம்), தமிழரசன் (புதிய தமிழகம்), முகமது இப்ராஹிம் (நாம் தமிழர் கட்சி), ஹுமாயூன் கபீர் (நாம் தமிழர் கட்சி), அர்ஜுணன் (சுயே), கனகராஜ் (சுயே), சிவக்குமார் (சுயே), செய்யது சுல்தான் இப்ராஹிம் (சுயே), செல்வகுமார் (சுயே), தில்லைநாதன் (சுயே), தெட்சிணாமூர்த்தி (சுயே), பாண்டியன் (சுயே), மகேந்திரன் (சுயே), முத்துகருப்பையா (சுயே), முத்துசெல்வம் (சுயே), ராமசாமி (சுயே), வேல்ராஜ் (சுயே), ஜெகதீசன் (சுயே) உள்ளிட்ட 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் 123 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். மாலை 3 மணிக்குள் திரும்ப பெறலாம். அதன்பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.