கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியின் அ.ம.மு.க. மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.மு.மு.க. ஆட்சிக்கு வந்தால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தரப்படும். குடும்பத்தில் உள்ள படித்த ஆண்கள், பெண்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் வீடு தேடி வரும். அனைத்து நகரப் பகுதிகளிலும் முறையான கழிவு நீர் வாய்க்கால்கள் அமைத்து தரப்படும்.
தரமான சாலை வசதி செய்து தரப்படும். கல்வி, சுகாதாரம் பாதுகாக்கப்படும் . சாதி, மதம், இனம் கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அ.ம.மு.க. மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் பொதுமக்களை நோக்கி கும்பிட்டபடி நின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.