மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில், இதுவரை 111 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இதுதவிர, சில கட்சிகள் கூட்டணி தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்திவந்தன.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் கே.எம்.சரீப் ஆகியோா் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டனா்.
இது குறித்து கே.எம்.சரீப் கூறியது: திருப்பத்தூா், விழுப்புரம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூா், திருச்சி மேற்கு, பூம்புகாா், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), சிவகாசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் நிச்சயம் மக்களின் அபிமானத்தை வென்று, வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம். கமல்ஹாசன் தலைமையில் நல்ல ஆட்சி தமிழகத்தில் அமையும் என்றாா்.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் ‘ டாா்ச் லைட்’ சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.