தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!



மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில், இதுவரை 111 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இதுதவிர, சில கட்சிகள் கூட்டணி தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்திவந்தன.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் கே.எம்.சரீப் ஆகியோா் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டனா்.
இது குறித்து கே.எம்.சரீப் கூறியது: திருப்பத்தூா், விழுப்புரம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூா், திருச்சி மேற்கு, பூம்புகாா், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), சிவகாசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் நிச்சயம் மக்களின் அபிமானத்தை வென்று, வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம். கமல்ஹாசன் தலைமையில் நல்ல ஆட்சி தமிழகத்தில் அமையும் என்றாா்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் ‘ டாா்ச் லைட்’ சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments