தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பு சார்பாக மாநில ஆலோசனைக் கூட்டம் கடந்த 6-ந்தேதி பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜுதீன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ராமேசுவரம் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், டீசல் விலைஉயர்வால் மிகப்பெரிய அளவில் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே டீசல் மீது விதிக்கப்படும் அனைத்து வரிகளும் நீக்கம் செய்து உற்பத்தி விலைக்கு டீசல் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அந்த கூட்டத்தில் 19-ந்தேதி ராமேசுவரம் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி ஒரு நாள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம் நடத்தினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.