சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்ககூடிய இந்த அறையில் சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க 18004252735 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கின்றனர்.
இதில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகவும், தேர்தல் விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருப்பதாகவும், சரக்கு வேனில் ஆட்களை ஏற்றி செல்வதாகவும் 14 புகார்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் பார்வையிட்ட போது எதுவும் இல்லை என தெரியவந்ததாக தெரிவித்தனர். தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் கட்டுப்பாட்டு அறைக்கு மேலும் பல புகார்கள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தேர்தல் விதிமுறகைள் மீறல் தொடர்பாக புகைப்படங்கள், வீடியோ எடுத்து cVIGIL செயலி மூலமும் பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.