தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இழுபறியாக இருந்த தென்காசி தொகுதியை காங்கிரஸ் போராடி பெற்றுள்ளது. சென்னையில் வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைத்தது. ஆனால் திமுக தரப்பில் 18 தொகுதிகள் எனக்கூற பேச்சு வார்த்தை கடும் இழுபறியானது. இதில் திமுக கூட்டணியில் தொடரலாமா என்கிற நிலைக்கு காங்கிரஸ் தலைவர்கள் யோசிக்க தொடங்கினர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் பேச்சுவார்த்தை நிறைவுபெற்று காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்குவது என முடிவானது.
திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதியானதை அடுத்து திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளும் கூட்டணியை உறுதிப்படுத்தின. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக காங்கிரஸ் கேட்கும் தொகுதியில் பல முட்டுக்கட்டைகள் வந்தன.
காங்கிரஸ் கேட்கும் தொகுதியில் ஏற்கெனவே வென்ற 8 தொகுதிகளில் 7 தொகுதிகளை அளிக்க திமுக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. முதுகுளத்தூர் தொகுதியில் ராஜக்கண்ணப்பன் போட்டியிட வாய்ப்புள்ளதால் அந்தத்தொகுதியை தர முடியாது என திமுக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது 25 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு உறுதியாகி உள்ள தொகுதிகள்:
1.பொன்னேரி, 2.ஸ்ரீபெரும்புதூர், 3.சோளிங்கர், 4.ஊத்தங்கரை, 5.ஓமலூர், 6.உதகமண்டலம், 7. கோவை தெற்கு, 8.காரைக்குடி, 9.மேலூர், 10.சிவகாசி, 11.திருவைகுண்டம், 12.குளச்சல் 13.விளவங்கோடு, 14. கிள்ளியூர், 15. ஈரோடு கிழக்கு, 16.தென்காசி, 17.அறந்தாங்கி, 18. விருதாச்சலம், 19.நாங்குநேரி, 20.கள்ளக்குறிச்சி, 21.திருவில்லிபுத்தூர், 22.திருவாடனை 23.உடுமலைப்பேட்டை, 24.மயிலாடுதுறை, 25.வேளச்சேரி
இவ்வாறு அந்த பட்டியலில் உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.