கோட்டைப்பட்டினத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடற்கரை பகுதியில் பொதுவாக அலை குறைவாகவே இருக்கும். இந்தநிலையில் நேற்று காலையில் திடீரென்று கடல் உள் வாங்கியது.

இதனால் சிறுவர்கள் கடல் உள்வாங்கிய பகுதியில் விளையாடினர். இதனிடையே சில மணிநேரத்திலேயே கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. 

இதேபோல் கோட்டைப்பட்டினம் மீன்பிடித்தளத்தில் கடல் உள்வாங்கி காணப்பட்டதால், படகுகள் தரையில் நின்றது. இதனிடையே மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதால் மீனவர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் கோட்டைப்பட்டினம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments