அறந்தாங்கி நகராட்சி 26-வது வார்டில் சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக, அப்பகுதி மக்கள் பதாகை வைத்துள்ளனர்.
அறந்தாங்கி நகராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல வார்டுகளில் சேதமான சாலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால் 26-வது வார்டில் உள்ள சாலை சீரமைக்கப்படவில்லை.
இதனால் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. வார்டு பகுதி மக்கள், அந்த சாலையில் சென்றுவர கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும், இந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று அப்பகுதி மக்கள் 26-வது வார்டில் சாலை சீரமைக்கப்படாவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போகிறோம் என பதாகை வைத்துள்ளனர்.
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட நகராட்சி (பொறுப்பு) ஆணையர் அய்யனார் தேர்தல் முடிந்த பிறகு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.