ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின்போது, நூறு சதவீதம் வாக்கு நமது இலக்கு என அச்சிடப்பட்ட ஆயிரம் முககவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஊர்வலம் ஆவுடையார்கோவில் 4 வீதிகளில் சென்று மீண்டும் பள்ளி வந்து நிறைவடைந்தது. ஊர்வலத்துக்கு அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிட செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச் செல்வன் வரவேற்றார்.
அறந்தாங்கி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஆனந்த மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களுக்கு முககவசம் வழங்கினார்.
இதில் தாசில்தார் சிவக்குமார், தனித்தாசில்தார் சூர்ய பிரபு, துணை தாசில்தார் ஜபருல்லா, உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குமார் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.