தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று இரவு ஏழு மணி உடன் பிரசாரம் முடிவடைகிறது. இன்று இரவு 7 மணிக்கு பிரச்சாரம் முடிவடைந்தவுடன் அரசியல் கட்சிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியவர்கள் என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்து தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* ஏப்ரல் 6ஆம் தேதி மாலை 7 மணிக்கு மேல் மின்னணு ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது
* தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த வெளியூர் ஆட்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்
* ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 7 மணி முதல் வாக்குப்பதிவு முடிவு வரை தேர்தல் பொதுக்கூட்டத்தையும், ஊர்வலத்தையும் நடத்தக்கூடாது
* திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை, வானொலி, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் ஆகியவற்றிலும் தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமும் பிரச்சாரம் செய்யக்கூடாது
* இசை நிகழ்ச்சி, பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது
* வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் நாளை மாலை 7 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேறவேண்டும்
* திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகியவற்றில் வெளியூர் ஆட்கள் தங்கக்கூடாது
* வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் உள்பட வாகன அனுமதிகள் நாளை இரவு 7 மணிக்கு மேல் செல்லாது
* வாக்காளர்களை வாக்குச்சாவடி அழைத்துவர வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாடகைக்கு அமர்த்த அனுமதி இல்லை
* வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரம் வரை வேட்பாளர்களின் அரசியல் கட்சிகள் தற்காலிக அலுவலகங்களில் இருவர் மட்டுமே இருக்க வேண்டும்
இந்த விதிமுறைகளை விதிமுறைகளை மீறிபவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.