புதுக்கோட்டையில் தேர்தல் நடத்தை விதிமுறை குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவி–்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி (தனி), விராலிமலை சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக ரகு, தேர்தல் செலவின பார்வையாளராக மண்டல் செயல்படுகின்றனர்.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, திருமயம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக கோவித்தராஜ், தேர்தல் செலவின பார்வையாளராக தினேஷ்குமார், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக அனிமேஷ் தாஸ், தேர்தல் செலவின பார்வையாளராக கார்னிடான் செயல்படுகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் காவல் பார்வையாளராக மட்டா ரவி கிரன் செயல்படுகிறார். இவர்களிடம் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.அதன்படி கந்தர்வகோட்டை, விராலிமலை தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ரகு- 9442937961, புதுக்கோட்டை, திருமயம் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் கோவிந்த ராஜ்- 9442937962, ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அனிமேஷ் தாஸ் -9080081469 என்ற செல்போன் எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.