புதுக்கோட்டையில் போதை ஊசி விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து கலெக்டர் உத்தரவிட்டார்.
புதுக்கோட்டையில் போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. போதை ஊசி விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதுக்கோட்டை டவுன் பகுதியில் சமீபத்தில் போதை ஊசி விற்ற பெரியார்நகரை சேர்ந்த பாண்டி (வயது 25), சத்தியமூர்த்தி நகர் விக்னேஷ் (23), பூங்கா நகர் பாஸ்கர் (34), அச்சுதன் (34) ஆகிய 4 பேர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப்பதிவு செய்தார்.
இந்தநிலையில் கைதானவர்களில் பாண்டி, விக்னேஷ், பாஸ்கர், அச்சுதன் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்படி 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 4 பேரிடம் அதற்கான நகலில் கையெழுத்து வாங்கிய பின் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
இதற்கிடையே போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்பவர்கள் மீதும், சிறுவர்கள், வாலிபர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.