புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நாட்களில் முகக்கவசம் அணியாத 2,242 பேருக்கு அபராதம்!



கரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதையடுத்து, தமிழக அரசு ஏப்.10-ம் தேதியில் இருந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒருபகுதியாக, முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோரை நிறுத்தி, அந்தந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் போலீஸார் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 1,192 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,38,400 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று, நேற்று 1,050 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2,10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுதவிர, சில இடங்களில் தனிமனித இடைவெளியை முறையாக பின்பற்றவில்லை என கடந்த 2 நாட்களில் 74 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.14,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 2 நாட்களில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய 2,316 பேருக்கு ரூ.4,63,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில்... கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போக்குவரத்து போலீஸார் நேற்று இரு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments