கந்தர்வகோட்டை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன்-சிறுமி பலியானார்கள். மேலும் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சொக்கம்பட்டி கள்ளர் தெருவை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி. இவரது மகன் விக்னேஷ் (வயது 8). அருகே உள்ள பிலா விடுதியை சேர்ந்த உடையப்பன் மகள் கிரிஜா (11). இவள் கள்ளர்தெருவில் உள்ள பாட்டிவீட்டுக்கு வந்து இருந்தாள்.
இந்தநிலையில் நேற்று விக்னேஷ், கிரிஜா மற்றும் 4 சிறுவர், சிறுமிகள் அப்பகுதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகில் உள்ள குளத்துக்கு குளிக்கச் சென்றனர். இவர்கள் குளத்தில் சற்றுதூரத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் 6 பேரும் சேற்றில் சிக்கி தவித்துக்கொண்டு இருந்தனர். 6 பேரும் சிறுவர்கள் என்பதால் சேற்றில் இருந்து தப்பிப்பது எப்படி என்று தெரியாமல் சத்தம்போட்டனர்.
இதைபார்த்த அந்த பகுதியில் நின்றவர்கள் குளத்தில் குதித்து 4 பேர்களை உயிருடன் மீட்டனர். ஆனால் விக்னேஷ், கிரிஜா ஆகியோர் சேற்றில் சிக்கி தண்ணீருக்குள் மூழ்கியதால் அதிக அளவில் தண்ணீர் குடித்து இருந்தனர். உடனடியாக இருவரும் வெள்ளாளவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். விக்னேஷ், கிரிஜா ஆகியோரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனும், சிறுமியும் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் சொக்கம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.