கம்ப்யூட்டர் உதிரிபாகம் தருவதாக ஆன்லைனில் ரூ.48,000 மோசடி: R.புதுப்பட்டினம் வாலிபர் ஏமாற்றம்!!



கம்ப்யூட்டர் உபகரணங்கள் தருவதாக கூறி ஆன்லைனில் மோசடி செய்த நபர்கள் மீது மீமிசல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அடுத்த ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்லா(24). இவர் மீமிசல் பகுதியில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்கு பொது சேவை மையம் அமைப்பதற்கான கருவிகள் வாங்க டெல்லியை சேர்ந்த நிறுவனத்திடம் விண்ணப்பித்தார். அந்தப் பொருளை வாங்குவதற்காக கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பல தவணைகளாக ரூ.40,800-ஐ அப்துல்லா ஆன்லைனில் கட்டியுள்ளார்.

அவர் பணம் கட்டிய சில நாட்களில் டெல்லியை சேர்ந்த அவருடன் பேசிய நபர்கள் அப்துல்லாவின் செல்போன் நம்பரை பிளாக் செய்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அப்துல்லா இதுகுறித்து மீமிசல் போலீசில் புகார் செய்தார். 

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் அப்துல்லாவை ஏமாற்றிய நபர்கள் மீது தகவல் தொழில் நுட்ப பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments