திருச்சி-ராமேசுவரம் ரெயில் பாதை மின் மயமாக்கும் பணிகள் தீவிரம்



திருச்சி-ராமேசுவரம் இடையே அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரெயில் பாதையின் இருபுறமும் மின்கம்பங்கள் நடப்பட்டு மின்கம்பிகள் இணைக்கப்பட்டு வருகிறது. ரெயில் போக்குவரத்து இல்லாத மதிய வேளையில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. 

மேலும் மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கினால் அடிக்கடி களமாவூர் கேட் மூடப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். குறிப்பிட்ட நேரத்துக்கு சென்று வர இயலாது. எனவே ரெயில் மேம்பால பணிகளை விரைவுப்படுத்தி, பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments