புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அருகில் உள்ள செரியலூர், நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம், மேற்பனைக்காடு உள்பட பல கிராமங்களில் நேற்றும் மழை பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை காற்றுடன் கன மழை பெய்ததால் பல இடங்களிலும் தென்னை மட்டைகள் மற்றும் மரக்கிளைகள் உடைந்து விழுந்தன.
மேற்பனைக்காடு பகுதியில் நேற்று முன்தினம் மரக்கிளைகள் உடைந்து மின்கம்பிகளில் விழுந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டு முழுமையாக மின்சாரம் கொடுக்கப்பட்டது.
அதே போல கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் நேற்று மாலை கன மழை பெய்த போது வாடிமாநகர் பகுதியில் உருமநாதன் என்பவர் குடும்பத்துடன் இணைந்து சிமெண்டு சீட்டு போடப்பட்ட உணவகம் மீது அருகில் நின்ற தென்னை மரம் உடைந்து சாயும் போது சத்தம் கேட்டு கடைக்குள் இருந்த உருமநாதன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என 5 பேரும் அவசரமாக வெளியேறியுள்ளனர். வெளியே வந்த பிறகு மரம் உணவகம் மீது விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.