புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
வடகாடு அருகிலுள்ள நெடுவாசல் நடுத்தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் பாலமுருகன் (30). இவா் கடந்த 2019, டிசம்பா் 30-ஆம் தேதி 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
இதுகுறித்து ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகாா் அளித்தாா். இதன் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினா், பாலமுருகனைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் த. அங்கவி ஆஜராகி வாதாடினாா்.
வழக்கு விசாரணையின் நிறைவில் குற்றஞ்சாட்டப்பட்ட பாலமுருகனுக்கு (படம்) 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட மகளிா் நீதிபதி ஆா்.சத்யா வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கெனவே மாநில அரசால் வழங்கப்பட்ட ரூ. 2.5 லட்சம் நிவாரண நிதியுடன், தற்போது மேலும் கூடுதலாக ரூ. 2.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.