ஆவுடையார்கோவிலில் ரூ.13 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டும், பஸ்கள் நிற்காததால் பயன்பாடு இன்றி உள்ளது.
ஆவுடையார்கோவிலில் யூனியன் அலுவலகம் அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சத்தில் கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழற்குடை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
யூனியன் அலுவலகம் அருகே உள்ள கடைவீதியில் எப்போதுமே கூட்டம் அதிகம் காணப்படுவதால், அங்குள்ள நெரிசலை தவிர்ப்பதற்காக தான் இந்த பஸ் நிறுத்தம் கட்டப்பட்டது. ஆனால் யூனியன் அலுவலகம் அருகில் உள்ள பயணிகள் நிழற்குடையில் பஸ்கள் நிற்காமல் கடைவீதியிலேயே நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது.
இதனால் இந்த புதிய பயணிகள் நிழற்குடை பயன்பாடு இன்றி வீணாகும் அவலநிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் நிழற்குடை அருகே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.