கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்த விவரத்தை மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அரசின் வலைதளத்தில் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
நாட்டில் கொரோனாவின் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் மேலானவர்கள் கொரோனா தொற்றால் பாதித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 9 முதல் 22 வரையில் சுமார் 122325 பேர் நோய் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி கூட இல்லாத நிலை மருத்துவமனைகளில் நிலவுகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்த விவரத்தை மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக தமிழக அரசின் வலைதளம் ஒன்றில் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகிறது. இந்த வலைதளம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்குகிறது.
இந்த வலைதளத்தை பயன்படுத்தி எந்த மருத்துவமனையில் படுக்கை வசதி உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி மருத்துவமனைகளை அணுகலாம்.
குறிப்பாக, கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் சப்போர்ட் உள்ள படுக்கைகள், ஆக்ஸிஜன் அல்லாத படுக்கைகள், ஐசியு மாறும் வென்டிலேட்டர் சப்போர்ட் உள்ள படுக்கைகள் என அனைத்து தகவலும் உள்ளது. அதில் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளது. நோயாளிகள் உள்ள படுக்கைகள் குறித்த விவரங்களும் உள்ளன. அதோடு சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தொடர்பு எண்களும் உள்ளன. விவரங்களுக்கு :
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.