கொரோனா இரண்டாம் அலையிடம் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை, உயிர்பலி எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தீவிரமாகியுள்ளதால் கொரோனா நோயாளிகள் அவதியில் உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்ப சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதன்படி, 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை அனுப்ப சவுதி அரேபியா ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில், “இந்தியாவுக்கு 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைக்க அதானி குழுமம் மற்றும் M/s Linde நிறுவனத்துடன் இந்திய தூதரகம் கூட்டணி அமைத்துள்ளது.
இதற்காக உதவியும், ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கிய சவுதி அரேபிய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 3,49,691 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும், 2,767 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,92,311 பேர் கொரோனவுக்கு பலியாகியுள்ளனர்.ர். இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.