கோபாலப்பட்டிணத்தில் விறுவிறு வாக்குப்பதிவு







தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கியது. அதனடிப்படையில் வாக்குப்பதிவு புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டம்.அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில்  உட்பட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் இன்று காலை 7மணி முதல் தொடங்கியது.

முன்னதாக அதிகாரிகள் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குகள் செலுத்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் அவ்வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு பூஜ்ஜிய நிலைக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டுவந்து சீலிடப்பட்டன.

அதனை தொடர்ந்து வாக்கு பதிவு முறையாக தொடங்கப்பட்டது. கோபாலப்பட்டிணத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை, முகக்கவசம், கையுறை ஆகியவை வழங்கி வாக்களிக்க வழிகாட்டப்பட்டு வருகிறார்கள்.

வாக்கு சாவடியில் இருந்து 100 மீட்டர் எல்லைக்குள் கூட்டம் கூடுவதை தடுக்கும் நோக்கில் துணை ராணுவபடையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக கண்கானித்து வருகிறார்கள்.

கோபாலப்பட்டினத்தில் காலை 7 மணி முதலே சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பகல் 1 மணிக்கு மேல் வாக்குப்பதிவு திடீரென மந்தமானது. கோடை வெயில் கொழுத்தியதால், வாக்காளர்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

இந்நிலையில் வெயில் சற்று குறைந்துள்ளதாலும், வாக்குப்பதிவு நேரம் முடிவடைய உள்ளதாலும்,  வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க வருகின்றனர்.வாக்காளர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

ஆண்கள், பெண்கள் தனித் தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments