ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மதரஸா சார்பாக அவரவர் வீடுகளின் முஸல்லாவில் அமர்ந்தவாரே நடைபெறும் மாபெரும் இஸ்திஃபார் மஜ்லிஸ்






அதிகமாக இஸ்திஃபார் ஓதினால் எல்லா நெருக்கடியான நிலையும் நீங்கிவிடும் எல்லா கவலைகளும் மகிழ்ச்சியாக மாறும் நினைக்காத வழியில் ரிஜ்க் நம்மை தேடி வரும் என்ற நபி ஸல் அவர்களின் பொன்மொழிக்கினங்க 
நாட்டில் அதிகரித்து வரும் கொடிய கொரோனா நோய் முற்றிலும் நீங்கிட ,மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்திட, புனித ரமழானை மஸ்ஜித்களில் அமல்களுடன் கழித்திட ,மாபெரும் இஸ்திஃபார் மஜ்லிஸ் துவங்கப்பட்டுள்ளது .

இச்சிறப்பு அமலில் நமது ரஹீமா பரக்கத் மதரஸா மாணவ மாணவிகளும் மற்றும்   விருப்பம் உள்ள பொதுமக்களும்,தாய்மார்களும் பங்குபொறலாம், 

தங்கள் வீடுகளில் முஸல்லாவில் அமர்ந்து,கிப்லாவை முன்னோக்கி ஒழுவுடன் ஓதவேண்டும்..

மாணவர்களும் மற்ற இதர ஆண்களும் தாங்கள் ஓதும் எண்ணிக்கையை மதரஸா ஆசியரிடமும்

மதரஸா மாணவிகளும். மற்ற இதர தாய்மார்களும்,பெண்களும்  தாங்கள் ஓதும். எண்ணிக்கையை மதரஸாவின் ஆசிரியைகளான ஆலிமாக்களிடம் கூறி
 பதிவிடவும்   ஓத வேண்டிய நாட்கள் : 26-04-2021முதல்03-05-2021 திங்கட்கிழமை
அஸர்  வரை  ஓத வேண்டிய மொத்த* எண்ணிக்கை : 10 இலட்சம் ஓத வேண்டிய இஸ்திஃபார்

அஸ்தஃபிருல்லாஹல்  அளீம் வ அதூபு இலைஹி
( அல்லது)  அஸ்தஃபிருல்லாஹல் அளீம்
( அல்லது ) அல்லாஹும்மஃபிர்லீ .
தாங்களும் தங்கள் குடும்பத்தார்களும் இந்த இஸ்திஃபார் அமலில் பங்கேற்று துஆ செய்யவும்.

அன்புடன்
மௌலவி, பாஜில், காரி, M.J. முகமது மைதீன் தாவூதி

பேராசிரியர்
ரஹீமா பரக்கத் 
தீனியாத் ஆண்கள் மக்தப்& நிஸ்வான் மதரஸா ஏம்பக்கோட்டை
மீமிசல் புதுக்கோட்டை
8883286170
9442656170

ஓத தெரிந்தவர்கள் இந்த இஸ்திஃபாரை ஓதுவது மிகவும் சிறப்பு :
அஸ்தஃபிருல்லாஹல்லதீ லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கைய்யூம் வஅதூபு இலைஹி.

சய்யிதுல் இஸ்திஃபார்

அல்லாஹும்ம அன்த ரப்பீ லாஇலாஹ இல்லா அன்த கலக்தனீ வஅன அப்துக்க வஅன அலா அஹ்திக்க வவஃதிக்க மஸ்ததஃத்து அவூது பிக்க மின் ஷர்ரி மா ஸனஃத்து அபூஉ  லக்க பி நிஃமத்திக்க அலைய்ய வஅபூஉ பிதன்பீ ஃபஃபிர் லீ ஃபஇன்னஹு லா யஃபிருத்துனூப இல்லா அன்த

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments