இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கிருமி வேகமாக பாதிப்பை உருவாக்கி வருவதை நீங்கள் அறிவீர்கள். நோய் பரவுவதை தடுக்க அரசு திணறி வருகின்றது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் வசதிகள் இல்லாமல் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் நோய் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.
கொரோனா நோய் வேகமாக பரவி வருவதால் அரசு சில நெறி முறைகளுடன் லாக் டவுன் அறிவித்து வருகிறது.
அதில் 30 ம் தேதி வரை வழிபாட்டு தளங்களில் பொது மக்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அறிவிப்பு வந்துள்ளது.
அந்த நெறி முறைகளை கடைபிடித்து கீழ்கண்டவாறு அமைத்துக் கொள்வும்
📌ஐவேளை தொழுகைகளை பள்ளிவாசல் இமாம் மற்றும் பொறுப்பாளர்களை கொண்டே நிறைவேற்றிக் கொள்ளவும்.
📌பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் ஐவேளை தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளவும்.
📌இரவு தொழுகைகளையும் இல்லங்களில் தொழுது கொள்ளவும்.
📌சமூக இடைவெளியுடன் கஞ்சி விநியோகம் செய்து கொள்ளவும்.
📌இப்தார் ஏற்பாடுகளை வீடுகளில் செய்து கொள்ளவும்.
30 தேதி வரை இந்த நடைமுறை தொடரும். பின்னர் சூழல் அறிந்து வழி காட்டப்படும். (இன்ஷா அல்லாஹ்)
நோய் பரவும் நேரங்களில் பாதுகாப்புடன் இருப்பது அவசியம் என மார்க்கம் நமக்கு வழி காட்டி உள்ளது.
உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
திருக்குர்ஆன் 2:195
இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.