அமரடக்கியில் 192 மதுபாட்டில்கள் பறிமுதல்!



ஆவுடையார்கோவில் போலீசார் அமரடக்கி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, அங்குள்ள நெல்குடோன் அருகே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் அங்கு இருந்த 192 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments