ஆலங்குடி அரசு மருத்துவமனை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் காலில் புண்ணுடன் ஆதரவற்ற நிலையில் உட்கார்ந்து இருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற கலெக்டர் உமாமகேஸ்வரி அந்த முதியவர் பற்றி விசாரித்தார். அந்த முதியவர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லமுடியாத நிலையில் இருந்தார். பின்னர் அவர் ஆலங்குடி தாசில்தார் கருப்பையாவிடம் முதியவருக்கு மருத்துவ சேவையும், மனநல சேவையும் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து தாசில்தார் முதியவரை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு முதியவரைக் குளிப்பாட்டி, புத்தாடைகள் அணிவித்து உணவு வழங்கினர். பின்னர் காலில் புண் இருந்ததால் உள்நோயாளியாக அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கான ஏற்பாடுகளை தலைமை மருத்துவர் பெரியசாமி செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் மாவட்ட மன நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.