கோபாலப்பட்டிணம் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரண உதவி தொகை இரண்டாயிரம் ரூபாயை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் பயனாளிக்கு வழங்கினார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சி அமைத்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற அன்றே தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததுபோல குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
இதை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரண நிதி முதல்கட்ட தவணையாக ரூ.2000 வழங்கும் இரண்டாயிரம் ரூபாயை பயனாளிக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உதயம்.J.தாஹீர், 3-வது வார்டு உறுப்பினர் அபுதாஹீர் மற்றும் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த திமுக நிர்வாகி பாரூக் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.