புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே அய்யம்பட்டினம் கிராமத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு மூட்டை மிதந்து வந்தது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த சுங்கத்துறை அதிகாரி வேல்முருகன் கடலில் மிதந்து வந்த மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தார். அப்போது, அதில், பொட்டலம், பொட்டலமாக சுமார் 23 கிலோ கஞ்சா இருந்தது.
பின்னர் இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருச்சி சுங்கத்துறையினர் அங்கு வந்து அதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயன்றபோது, யாராவது பார்த்ததால் இங்கே போட்டுவிட்டு சென்றார்களா? அல்லது இலங்கையில் இருந்து இங்கு கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.