கோட்டைப்பட்டினம் அருகே தேள் கொட்டியதில் 2 வயது குழந்தை உயிரிழப்பு



கோட்டைப்பட்டினம் அருகே கார்க்கமங்கலம் கிராமத்தில் தேள் கொட்டியதில் 2 வயது குழந்தை பிரதிஸ் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை அடுத்த கார்க்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தழகு. இவரது மகன் பிரதிஸ் (வயது 2). இவன் கடந்த 14-ந் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென்று பிரதிசின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு தேள் அவனை கொட்டிவிட்டு ஓடியது. 

இதனையடுத்து தேளை அடித்து கொன்றுவிட்டு, குழந்தையை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதிஸ் நேற்று பரிதாபமாக இறந்தான். 

இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments