தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அதேபோல் சிகிச்சை பலன் இன்றி இறப்பவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று வரை 19 ஆயிரத்து 154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 ஆயிரத்து 988 பேர் குணமடைந்துள்ளனர். 118 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.தற்போது 2 ஆயிரத்து 983 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீமிசல் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒரு தெருவில் 4 பேர் மற்றும் அதற்கு மேல் தொற்று பாதிப்பு இருந்தால் தடுப்புகள் வைத்து கட்டுப்பாட்டு பகுதிகளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஏம்பக்கோட்டையில் 17 பேருக்கு தொற்று உறுதியானதால் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.