புதுக்கோட்டை கலெக்டருடன் காணொலி மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் நேற்று மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் உமா மகஸே்வரியிடம் கேட்டறிந்தார். மாவட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், சிகிச்சை மையங்கள், காய்ச்சல் முகாம்கள், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு, சிகிச்சைக்குரிய படுக்கைகளின் எண்ணிக்கை, தனியார் மருத்துவமனைகளில் உள்ள 50 சதவீத இருக்கைகள் விவரம், மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் கலெக்டருக்கு உரிய ஆலோசனைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எம்.சந்தோஷ்குமார், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி, பொது சுகாதார துணை இயக்குனர்கள் கலைவாணி, விஜயக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.