கோட்டைப்பட்டினம் முஸ்லீம் ஜமாத் (வக்பு) மற்றும் தமுமுக மருத்துவ சேவையும் இனைந்து நடத்திய கபசுர குடிநீர் முகாம்



கொரோனோ நோயினைக் கட்டுப்படுத்தும் விதமாக கோட்டைப்பட்டினம் பொதுமக்களின் நலன் கருதி முஸ்லீம் ஜமாத் (வக்பு) மற்றும்  தமுமுக மருத்துவ சேவையும் இனைந்து நடத்திய கபசுர குடிநீர்  முகாம் 21/05/2021 நேற்று வெள்ளி கிழமை காலை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வை காவல்துறை உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் (SI) அவர்களும், கிராம நிர்வாக அலுவலர் (VAO) அவர்களும் துவங்கி வைத்து சிறப்பித்தனர். உடன் முஸ்லீம் ஜாமாத் (வக்பு) நிர்வாகிகளும் கோட்டை தமுமுக நிர்வாகிளும் உடனிருந்தனர்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் கபசுர குடிநீர் பருகி பயன்பெற்றனர்.

இந்நிகழ்வை சிறப்பித்து தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இப்படிக்கு..
முஸ்லீம் ஜமாஅத் (வக்பு),
தமுமுக மருத்துவ சேவை,
கோட்டைப்பட்டினம்,







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments