மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் : எம்எல்ஏ ராமச்சந்திரன் கோரிக்கை



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனை அல்லது அவசர கால சிகிச்சை பிரிவு மருத்துவமனையாகவோ தரம் உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு அறந்தாங்கி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீமிசலில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு மீமிசல் மட்டுமின்றி சுற்றுவட்டாரா பகுதியை சேர்ந்த மக்களும் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகவோ அல்லது அவசர கால சிகிச்சை பிரிவு மருத்துவமனையாகவோ தரம் தரம் உயர்த்தினால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர். எனவே, இம்மருத்துவமனையை அரசு மருத்துவமனையாகவோ அல்லது அவசர கால சிகிச்சை பிரிவு மருத்துவமனையாகவோ தரம் உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கையை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு மனு அனுப்பியுள்ளார்.
மீமிசல் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க மனு அனுப்பியுள்ள அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ ராமச்சந்திரன் அவர்களுக்கு மீமிசல் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் GPM மீடியா சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments