ஈகைத்திருநாள் (நோன்பு பெருநாள்) உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய மக்கள் நேற்று முன்தினம் மற்றும் நேற்று கொண்டாடினர்.
கொரோனா நோய் பரவல் இரண்டாம் அலை அதிகரித்துவருவதன் காரணமாகவும் மே 24 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் வெகு விமர்சையாக கூட்டுதொழுகை நடத்தவேண்டிய நோன்பு பெருநாள் தொழுகை வீடுகளில் தனி மனித இடைவெளி கடைபிடித்து குடும்பத்தார் ஒன்று கூடி அவர் அவர் பகுதிகளில் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டனர்.
கோபாலப்பட்டிணத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கபட்டு உறவினர்கள், நண்பர்களுடன் அவரவர் இல்லங்களில் சிறப்பான முறையில் கடமையானா நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி தங்களின் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு இளைஞர்கள் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.
அதே போன்று நேற்று முன்தினம் (13/05/2021) சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தர், பஹ்ரைன், ஓமன் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் கொண்டாடினர்.
அதே போன்று நேற்று (14/05/2021) புருனையில் வாழும் நமது ஊர் மக்கள் மிகவும் குதூகலத்துடன் சமூக இடைவெளியுடன் ஈகைத்திருநாளை கொண்டாடினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.