கோபாலப்பட்டிணத்தில் திடீரென உள்வாங்கிய கடல்





கோபாலப்பட்டிணத்தில் திடீரென கடல் உள்வாங்கியது.

வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் கடந்த மே 25 செவ்வாய் கிழமை அன்று பலத்த காற்று வீசியது.

இதன் காரணமாக கோபாலப்பட்டிணத்தில் பலத்த காற்று வீசியது. அடிக்கடி மற்றும் தொடர் மின்தடையும் ஏற்ப்பட்டது.

இந்நிலையில் இன்று மே 28 காலை சில அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் தரை தட்டி நின்றன.  

இதனிடையே சில மணிநேரத்துக்கு பிறகு கடல் சகஜநிலைக்கு திரும்பியது. இந்த நிலையில் கடல் திடீரென உள்வாங்கியதால் பாசிகள் மேலே மிதந்து காணப்பட்டது. 

கோபாலப்பட்டிணம் கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments