தமிழகத்தில் ஜனவரி 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்பின் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
இதனிடையே 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் முன்பதிவு செய்தனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த இளைஞர்கள் மே 25 செவ்வாய்கிழமை அன்று பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அரசு மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட முகாமில் கோவிஷீல்டு-கொரோனா முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.
பின்னர் தடுப்பூசி போட்டுக்கொண்ட அன்வர் கூறியாதவது:
கோபலப்பட்டிணம் ஊர் முழுக்க கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் அதிகமாக காணப்படுவதால் அரசின் கொரோன தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமான அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தில் அரசின் ஆலோசனைகளுக்கு உட்பட்டு கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல் வளாகத்தில் அரசு மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட முகாமில் நண்பர்களோடு கலந்து கொண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டோம்.
இந்த முகாமில் என்னோடு மகாதீர், சாலிகு, அசாருதீன், ரியாஸ், ஹுசைன், ரசாத் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்! அனைவரும் இந்த தடுப்பூசி போடும் முகாமில் கலந்துகொண்டு நோய் தொற்று நமக்கும் பிறருக்கும் பரவுவதில் இருந்து பாதுகாத்துகொள்ளுங்கள்.
அனைத்து மக்களையும் கொரோனா எனும் கொடிய நோயை விட்டு எல்லாம் வல்ல இறைவன் பாதுகாக்க பிரார்த்தனை செய்யவேண்டும்.
இவ்வாறு அன்வர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.