புதுக்கோட்டையில் கொரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் மூலிகை தாம்பூலம் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதிஜா கூறியதாவது:-
மூலிகை தாம்பூலம் என்பது வெற்றிலை, கிராம்பு, ஓமம், தாளிசாதி வடகம், பனங்கற்கண்டு ஆகியவைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வெற்றிலை 2, கிராம்பு 2, தாளிசாதி வடகம் 1 இதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து செய்யப்படுகிறது. வெற்றிலையில் ஹைட்ராக்ஸி சாவிகோல் என்ற பயோட்டோ கெமிக்கல் உள்ளது.
இது பசியை தூண்டக் கூடியதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதை சீராக்குவதற்கும் பயன்படுகிறது. இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளை பலப்படுத்தக் கூடியதாகவும் உடலில் உள்ள வலியைப் போக்கி நன்றாகப் பசியைத் தூண்டக் கூடியதாகவும் இருக்கும். ரத்த தட்டு அணுக்கள் குறைவதை தடுக்க கூடியதாகவும், ரத்தம் உறைவதை தடுக்கக் கூடியதாகவும், பூஞ்சை நோய்க்கு எதிராக செயல்படக் கூடிய தாகவும் இருக்கும்.
கிராம்பு மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை உடையது. இதைத்தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல்வேறு வகையான நோய் கிருமிகளின் பாதிப்பிலிருந்து காக்கும். மூலிகை தாம்பூல சிகிச்சை நுரையீரல் தொற்று அதிகமாக ஏற்படாமல் தடுத்து ஆக்சிஜன் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் உடல் வலியைப் போக்கி நோய்த் தொற்றில் இருந்து விரைவில் குணமடைய உதவுகிறது.
இவ்வாறு கூறினார்.
இச்சிகிச்சை பணியை மருத்துவர்கள், தாமரைச்செல்வன், வேங்கடகிருஷ்ணன், செந்தில் ஆகியோர் அடங்கிய குழுவினர் தினசரி வழங்கி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.