புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பெருந்தொற்று:
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் Dr.மு.மு.ஹனிபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும் கொரோனா பெருந்தொற்று மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையையே நம்பி உள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் வயது மூத்த முதிய கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்கு அனுமதிப்பதில்லை. ஆகையால் வயது மூத்த முதிய கொரோனா நோயாளிகளும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையையே நம்பி உள்ளனர். இதனால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் ஆக்ஸிஜன் வசதி உள்ள படுக்கைகள் நிரம்பி உள்ளன.
ஆகவே இதனை போக்கும் விதமாக அனைத்து தாலுகா அரசு மருத்துவ மனைகளிலும் ஆக்ஸிஜன் வசதி உள்ள படுக்கைகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளையும் போர்கால அடிப்படையில் அமைத்திட தமிழக அரசை அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.