புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள ஏம்பகோட்டை மற்றும் ஆர்.புதுபட்டினம் பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன் அதிக நபர்கள் பாதிப்படைந்தனர்.
இதனால் இப்பகுதியில் செய்யப்பட்டுள்ள சுகாதார பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இப்பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய தயார் நிலையில் உள்ளது என்று அவர் கூறினார். பின்னர் தடைசெய்யப்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு எவ்வகையான உதவி தேவைப்படுகிறது என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவராமன், மீமிசல் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மீமிசல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் ராமச்சந்திரன், கவுதம் மற்றும் சுகாதாரத் துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.