இந்தியாவை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் கரோனா 3-ம் அலை தாக்கக் கூடும்: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை




கரோனா வைரஸின் மூன்றாவது அலை இந்தியாவை 6 முதல் 8 வாரங்களில் தாக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். மேலும், ஏற்கெனவே நாம் எதிர்கொண்ட இரண்டு அலைகளை விட மூன்றாம் அலை மிக தீவிரமானதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை எட்டிய வைரஸ் பரவல், தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், 4 லட்சத்துக் கும் அதிகமாக பதிவாகி வந்த தினசரி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, இப் போது 60 ஆயிரமாக குறைந்துள்ளது. அதேபோல, கரோனா பாதிப்பால் உயி ரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைய தொடங்கி இருக்கிறது.

இருந்தபோதிலும், கரோனா வைர ஸின் மூன்றாம் அலை இந்தியாவை விரை வில் தாக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். எனவே, அதனை எதிர் கொள்ளும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.




இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா நேற்று பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:

கரோனா இரண்டாம் அலையின் தீவி ரம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக, நாட்டில் பெரும் பாலான மாநிலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளில் பெரிய அளவில் தளர்வுகள் வழங்கப்படுவதை பார்க்க முடிகிறது. தளர்வுகள் அதிகரிக்க அதி கரிக்க, மக்கள் மத்தியில் வைரஸ் தொடர் பான விழிப்புணர்வு பல மடங்கு குறை கிறது. முகக்கசவம் அணிதல், சமூக இடை வெளியை பின்பற்றுதல் போன்ற வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கைவிட்டு வருகின்றனர். இதனை உற்று நோக்கும் போது, பெருந்தொற்றின் முதல் அலை, இரண்டாம் அலையில் இருந்து நாம் பாடம் ஏதும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. ஆகவே, மிகக்குறுகிய காலத்தில் கரோனா மூன்றாம் அலையை நாம் எதிர்பார்க்கலாம்.

இந்தியாவை அடுத்த 6 முதல் 8 வாரங் களில் வைரஸின் மூன்றாம் அலை தாக்கக் கூடும். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத் துதல், வைரஸ் தடுப்பு விதிமுறைகளை கடுமையாக்குதல் போன்ற நடவடிக்கை களால் மூன்றாம் அலையை நாம் சிறிது வேண்டுமானால் தாமதப்படுத்தலாம். ஆனால், அதனை தவிர்க்க முடியாது. எனவே, மூன்றாம் அலையை எதிர் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

வைரஸ் தடுப்பு விதிமுறைகளை மட்டும் பின்பற்றுவதில் எந்த பயனும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். அதனுடன் கூடுதலாக, வைரஸ் உருமாற்றம் அடைவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஏனெனில், பிரிட்டனில் இருந்து வந்த புதிய வகை உருமாற்ற வைரஸால் தான், இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்தது. ஆதலால், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளை கடுமையான வைரஸ் சோதனைக்கு உட்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல, வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கும்போது, எந்தெந்த பகுதிகளில் தினசரி பாதிப்பு அதிகமாக பதிவாகிறதோ அங்கெல்லாம் சிறிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்.

அதே சமயத்தில், அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் மிகவும் முக்கியம். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவதவர்களே, வைரஸ் தாக்கு தலுக்கு எளிதில் ஆளாவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கரோனா முதல் அலையில், வைரஸ் பரவலின் வேகம் குறைவாக இருந்தது. ஆனால், இரண்டாம் அலையில் வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்ததுடன் அதன் வீரியமும் அதிகமாக இருந்தது. எனவே, மூன்றாம் அலையின்போது வைரஸ் பரவலும் அதன் வீரியமும் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

வைரஸ் பரவுவது அதிகரிக்கும் போது மருத்துவமனைகளில் படுக்கை களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும். இதுபோன்ற அனைத்து பிரச்சினைகளை யும் முன்கூட்டியே கணித்து, மூன்றாம் அலையை சமாளிக்க நாம் வியூகம் அமைப்பது அவசியம். இவ்வாறு ரன்தீப் குலேரியா கூறினார்.

'அச்சுறுத்தலை ஏற்படுத்தும் டெல்டா பிளஸ் கரோனா வைரஸ்'

"இந்தியாவை தாக்கவுள்ள கரோனா மூன்றாம் அலையின்போது டெல்டா பிளஸ் வகை தொற்றுகளே மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது" என்று ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸ்கள் மிக வேகமாக உருமாற்றம் அடைவதாக இருக்கின்றன. இதனை வைத்து பார்க்கும்போது, மூன்றாம் அலையில் இந்த வகை வைரஸ் தொற்றுகள்தான் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. எனவே, இந்த வைரஸின் மரபணு வரிசையை தொடர்ந்து ஆராய்ச்சி செய்யவும், கண்காணிக்கவும் வேண்டும். அதேபோல, டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு செயற்கை புரதத்தை உட்செலுத்தும் ஆன்டி-பாடி சிகிச்சை முறை பலனளிக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, இதுதொடர்பான தரவுகளை சேகரிக்கவும், ஆராயவும் தரமான ஆய்வகங்களை அமைக்க வேண்டியது முக்கியம்.இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments