தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி: மத்திய அரசு தகவல்



தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவல், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெல்டா திரிபாக இந்தியாவில் பரவிவந்த கொரோனா, தற்போது டெல்டா பிளஸாக உருமாற்றம் அடைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக்காக எடுக்கப்பட்ட ஆயிரத்து 159 மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மரபியல் சோதனைக்கு உட்பட்டதில் சென்னையில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது.

இதனிடையே நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் டெல்டா ப்ளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், டெல்டா பிளஸ் வகை திரிபு குறித்து மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அரசு இதை கட்டுப்படுத்தும் முயற்சியை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் டெல்டா ப்ளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேசிய அவர், “நாடெங்கும் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 20 பேருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில், டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா மேலும் பரவாமல் இருக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 

தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று உறுதியான நிலையில் தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள்:

சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்
 
டெல்டா பிளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் 

டெல்டா ப்ளஸ் நுரையீரலை கடுமையாக பாதித்து எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது

பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments